Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் கமலா ஹாரிஸ் வெற்றி பெற பூர்வீக கோவிலில் வழிபாடு கமலா ஹாரிஸ் வெற்றி பெற பூர்வீக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தியாகராஜர் கோவில் குளத்தில் தண்ணீர் தேங்க நடவடிக்கை
எழுத்தின் அளவு:
தியாகராஜர் கோவில் குளத்தில் தண்ணீர் தேங்க நடவடிக்கை

பதிவு செய்த நாள்

04 நவ
2020
12:11

திருவொற்றியூர் : திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில், ஆதிசேஷ தீர்த்த குளத்தில், தண்ணீர் தேங்கும் விதமாக, 26 லட்சம் ரூபாயில், களிமண் லேயர் கட்டமைப்பு அமைக்கும் பணி துவங்கியது. சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில் பழமையானது. கோவிலினுள் பிரம்ம தீர்த்த குளமும், வெளியே ஆதிசேஷ தீர்த்த குளமும் உள்ளது.ஆண்டுதோறும், தைப்பூச தினத்தன்று, ஆதிசேஷ தீர்த்த குளத்தில், தெப்போற்சவம் நடைபெறும். கடந்த 2015ல், கொட்டிய பெருமழைக்கு குளம் நிரம்பி, 10 ஆண்டுகளுக்கு பின், 2016ல், தெப்போற்சவம் நடந்தது.

பின், 2017ல், குளத்தில் தண்ணீர் இல்லாததால், தெப்போற்சவம் நடக்காத நிலையில், 2018ல், குளத்தில் பாதி தண்ணீர் நிரம்பியதால், நிலை தெப்போற்சவம் நடந்தது.தொடர்ந்து, 2019 மற்றும் 2020ல், வெளிகுளத்தில் தண்ணீர் இல்லாததால், மாற்று ஏற்பாடாக, கோவிலினுள் இருக்கும் பிரம்ம தீர்த்த குளத்தில், நிலை தெப்போற்சவம் நடத்தப்பட்டது. மணல் பூமி மற்றும் சுற்றுவட்டார குடியிருப்புகளால், நிலத்தடி நீர் மோட்டார் மூலம் உறிஞ்சப்படுவதால், ஆதிசேஷ தீர்த்த குளத்தில், தண்ணீர் தேங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.தீர்வாக, குளத்திற்கு வரும் தண்ணீர் வற்றாதபடி, களிமண் லேயர் அமைக்க, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. திருக்கோவில் நிதியான, 26 லட்சம் ரூபாய் செலவில், களிமண் லேயர் அமைக்கும் பணி, நேற்று துவங்கியது. உதவி ஆணையர் சித்ரா தேவி தலைமையில், திருக்கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான, திருவள்ளூர் மாவட்டம், வெள்ளிவாயிலில் உள்ள இடத்தில் இருந்து, களிமண்ணை எடுத்து, குளத்தில் நிரப்பும் பணி நடக்கிறது.இரண்டரை ஏக்கர் பரப்பளவிலான குளத்தில், 3,600 கனமீட்டர் களிமண், 180 டாரஸ் லாரிகளில் எடுத்து வரப்பட்டு, 1.5 அடி தடிமனுக்கு லேயர் கட்டமைக்கும் பணி, ஒரு மாதத்தில் முடியும் என, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். பணி நிறைவுறும் பட்சத்தில், 25 அடிக்கு மேல், ஆதிசேஷ தீர்த்த குளத்தில் தண்ணீர் தேக்க முடியும். கட்டமைக்கப்படும் களிமண் லேயரால், தண்ணீர் எளிதில் வற்றாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, திருப்பதி கோவிலிருந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதர் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை இன்று ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மாத 3வது சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேக ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், வளர்பிறை ஏகாதசி விழா ... மேலும்
 
temple news
தேனி; வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. அதற்காக இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், - கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar