Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவபாண்டலத்தில் மகா சண்டி ஹோமம் கிருஷ்ணராயபுரம் முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வறண்ட நிலையில் வாசீஸ்வரர் குளம்
எழுத்தின் அளவு:
வறண்ட நிலையில் வாசீஸ்வரர் குளம்

பதிவு செய்த நாள்

04 நவ
2020
01:11

திருப்பாச்சூர் : திருப்பாச்சூரில், பராமரிப்பில்லாததால், வாசீஸ்வரர் கோவில் குளம் வறண்டு கிடப்பது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.

திருவள்ளூர் அடுத்த, திருப்பாச்சூரில், ஹிந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் சுவாமி கோவில்.இந்த கோவிலுக்கு சொந்தமான குளம், கடம்பத்துார் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது.இந்த கோவில் குளத்திற்கு வரும் வரத்துக் கால்வாய்கள் அனைத்தும், துார்ந்து போனதால், குளத்திற்கு நீர் வருவது, 20 ஆண்டுகளாக தடைபட்டுள்ளது. இதனால், கோவில் குளம் எப்போதும் நீரின்றி வறண்டே காணப்படும். சில தினங்களுக்கு முன் பெய்த மழையில்கூட ஒரு சொட்டு மழை நீர் கூட கோவில் குளத்தில் சேகரமாகவில்லை. இதற்கு கோவில் குளத்திற்கு வரும் வரத்து கால்வாய்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் துார்ந்து போய் ஆக்கிரமிப்பில் உள்ளதே காரணம் என, பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இந்த கோவில் குளம் போதிய பராமரிப்பில்லாததால், படிகள் மற்றும் குளத்தின் நடுவே உள்ள மண்டபமும், சிதலமடைந்து செடிகள் வளர்ந்து புதர் மண்டிக் காணப்படுகின்றன.ஹிந்து அறநிலையத் துறையினர் கோவில் குளத்தை முறையாக பராமரிக்காததே காரணம் என, பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட ஹிந்து அறநிலைய துறையினர், வாசீஸ்வரர் சுவாமி கோவில் குளத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar