கவசம் என்பது உடலைப் பாதுகாக்கும் உலோகத்தாலான ஒரு சட்டை. சண்டையிடும் வீரர்கள் உடலில் காயம் ஏற்படாமல்இருக்க அணிந்து கொள்வார்கள். இதுபோல், இயற்கையினாலும் எதிரிகளாலும் தீயசக்திகளாலும் நம் உடலுக்கும் மனத்திற்கும் காயம் ஏற்படாமலிருக்க மந்திரத்தினால் கவசம் செய்து கொள்வது (பாதுகாத்துக் கொள்வது) எல்லா சமூகத்தினரிடமும், எல்லா மொழிகளிலும் கூறப்பட்டுள்ள ஒன்றாகும். சிவகவசம், விஷ்ணு கவசம், துர்கா கவசம், சுப்ரமண்ய கவசம் என பலவாறாக உள்ளன. ஸ்கந்த குரு கவசத்தை பாராயணம் செய்தால் நம் உடல் பாதுகாக்கப்படுவதுடன் தீய வழிகளில் செல்லாமல் மனதையும் பாதுகாக்கும்.