Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஊத்துக்கோட்டை கோவிலில் சங்கடஹர ... ஸ்ரீவாரிமெட்டு மார்க்கத்தில் பக்தர்களுக்கு அனுமதி ஸ்ரீவாரிமெட்டு மார்க்கத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏழு ஊர் முத்தாலம்மன் கோயில் சப்பரம் திருவிழா
எழுத்தின் அளவு:
ஏழு ஊர் முத்தாலம்மன் கோயில் சப்பரம் திருவிழா

பதிவு செய்த நாள்

06 நவ
2020
10:11

டி.கல்லுபட்டி:மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகே வி.அம்மாபட்டியில் ஏழு ஊர் முத்தாலம்மன் கோயில் சப்பரம் திருவிழா நடந்தது.

தேவன்குறிச்சி, டி. கல்லுப்பட்டி, சத்திரபட்டி, வன்னிவேலம்பட்டி, அம்மாபட்டி, காடனேரி, கிளாங்குளம் ஆகிய ஊர்கள் இணைந்து 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐப்பசியில் முத்தாலம்மனுக்கு விழா எடுப்பது வழக்கம். முத்தாலம்மனை தேவன்குறிச்சியில் ஆதிபராசக்தி, கல்லுப்பட்டியில் சரஸ்வதி, வன்னிவேலம்பட்டியில் மகாலட்சுமி, வை.அம்மாபட்டியில் பைரவி, காடனேரியில் திரிபுரசுந்தரி, கிளாங்குளத்தில் சபரி, கி.சத்திரப்பட்டியில் சவுபாக்கியவதியாக வழிபடுகின்றனர். அம்மாபட்டியில் ஏழு ஊர்களுக்கு அம்மன் உருவாக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு அவரவர் ஊர்களிலிருந்து தலை சுமையாக ஆறு சப்பரங்களை அம்மாபட்டிக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து முத்தாலம்மனை அவரவர் ஊருக்கு எடுத்துச்சென்று வழிபடுவது இத்திருவிழாவின் சிறப்பம்சம்.

கிராமங்களில் காப்பு கட்டி 15 நாள் விரதம் இருந்த இளைஞர்கள் 50 அடி உயரத்தில் அம்மன் சப்பரம் செய்து, அதைத் தூக்கிக் கொண்டு பக்தர்கள் புடைசூழ அம்மாபட்டிக்கு நேற்று காலை வந்தனர். 6 சுவாமி சிலைகளுக்கு அந்தந்த ஊர் நாட்டாமைகள் அம்மனுக்கு முதல் மரியாதை வழங்கினர். அதன் பின் 6 சப்பரங்களில் சிலைகளை வைத்து அவரவர் ஊர்களுக்கு எடுத்துச் சென்று வழிபட்டனர். ஏழு ஊர்களைச் சேர்ந்தவர்கள் வேலைக்காக எங்கு சென்றிருந்தாலும் இத்திருவிழாவில் பங்கேற்க வந்து விடுவார்கள். ஜாதி பேதமின்றி, அரசியல் பாகுபாடின்றி அனைத்து மக்களும் ஒற்றுமையாக கொண்டாடுவர். திருவிழாவிற்கு ஏற்பாடு செய்து கொடுத்த அமைச்சர் உதயகுமாருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பார்வதி தேவியின் வடிவமான கௌரி தேவிக்கான விரதமாகும். வீட்டில் சந்திரனின் கதிர்கள் விழும் இடத்தில் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை திருப்பதியில் தரிசனம் செய்யச் சொல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. உடுமலை குறிஞ்சேரியில், ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கம்பம்; கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் திருப்பணிகளை முழு வீச்சில் நடத்தி டிசம்பரில் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar