அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே அய்யூரில் அரபு மஸ்தான் சந்தனக்கூடு கொடிமர திருவிழா நடந்தது. தர்ஹாவின் சந்தனக்கூடு கொடிமரம், நேர்த்திக்கடன் செலுத்துவோரின் கொடிமரங்கள் பள்ளி வாசலுக்கு எடுத்து வரப்பட்டன. சந்தனம், ஜவ்வாது, மல்லிகை மலர்களால் கொடிமரங்கள்அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. ஏற்பாடுகளை அய்யூர் முஸ்லிம் ஜமாத்தார்கள் செய்தனர்.