Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை ... சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் வடுகபைரவர் பூஜை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறநிலையத்துறை உத்தரவால் கோயில் பணிகளில் குழப்பம்
எழுத்தின் அளவு:
அறநிலையத்துறை உத்தரவால் கோயில் பணிகளில் குழப்பம்

பதிவு செய்த நாள்

09 நவ
2020
09:11

சென்னை : அறநிலையத் துறை வழக்கு தொடர்பான நீதிமன்ற அறிவுறுத்தல் பற்றிய தவறான புரிதல் காரணமாக தமிழக கோயில்களில் நடக்கும் திருப்பணி பராமரிப்பு பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நீதிமன்ற அறிவுறுத்தலை தெளிவுபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த கோவில் புனரமைப்பு குழு தொடர்பான வழக்கு உள்ளிட்ட சில மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தன.புனரமைப்பு குழு தொடர்பான வழக்கில் விரைவில் உத்தரவு பிறப்பிக்க போவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இவ்வழக்கு விசாரணையின் போது பழமை வாய்ந்த மூன்று கோவில்கள் இடிக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை ஒரு செங்கல்லை கூட அகற்றக் கூடாது; இது குறித்து இணை ஆணையர்கள் நிர்வாக அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்நிலையில் அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு கமிஷனர் பிரபாகர் சுற்றறிக்கை ஒன்றை நேற்று முன்தினம் அனுப்பியுள்ளார். அதில் உயர் நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் அறிக்கையின்படி நீதிபதிகள் அறிவுறுத்தலை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். ஊரடங்கு தளர்வுக்குப் பின் தமிழகத்தில் பல கோவில்களில் கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மேலும் பெரும்பாலான கோவில்களில் சன்னிதிகளை தவிர கோவில் வளாக மேற்கூரை மடப்பள்ளி நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சீரமைப்பு மழைக்கால பராமரிப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அறநிலையத் துறை கமிஷனரின் சுற்றறிக்கை திருப்பணிகள் பராமரிப்பு நடக்கும் அனைத்து கோவில்களிலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.இதனால் அனைத்து பணிகளையும் கிடப்பில் போடும் சூழல் ஏற்பட்டுள்ளது. நீதிபதிகளின் அறிவுறுத்தல் பற்றிய தவறான புரிதலே இந்த சுற்றறிக்கை என கருதப்படுகிறது. எனவே நீதிமன்ற அறிவுறுத்தலை தெளிவுபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடம் எழுந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar