Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி ... விருந்தினரை அழைத்தால் அபராதம் : கோவில் திருவிழாவுக்கு கட்டுப்பாடு விருந்தினரை அழைத்தால் அபராதம் : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை மண்டல- மகரவிளக்கு சீசனில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலை மண்டல- மகரவிளக்கு சீசனில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு

பதிவு செய்த நாள்

10 நவ
2020
03:11

 நாகர்கோவில் : மார்க்சிஸ்ட் தலைமையிலான பினராயி விஜயன் அரசு, மண்டல - மகரவிளக்கு காலத்தில் சபரிமலை செல்ல செய்தியாளர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது.

இதனால் சபரிமலை குறித்த தகவல்களை பக்தர்கள் அறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மண்டல - மகரவிளக்கு சீசனில் சபரிமலை நடை 61 நாட்கள் திறந்திருக்கும். ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.நவ.,15ல் தொடங்கும் சீசனில் கொரோனா காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஆன்லைனில் முன்பதிவு செய்த ஆயிரம் பேர் மட்டுமே தினமும் அனுமதிக்கப்பட உள்ளனர்.சனி, ஞாயிறில் இரண்டாயிரம் பேர் அனுமதிக்கப்பட உள்ளனர்.போலீசார், ஊழியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சபரிமலையில் தங்கி பணி செய்ய உள்ளனர்.

ஆனால் செய்தியாளர்கள் தங்கக் கூடாது என்று கேரள அரசு உத்தர விட்டுள்ளது. இதன் மூலம் சபரிமலையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தியாளர்கள் தங்கி பணியாற்றி வருவதை பினராயி விஜயன் அரசு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.வயது பெண்கள் சபரிமலை செல்ல பினராயி விஜயன் அரசு எடுத்த தகடுதத்தங்களை பத்திரிகைகள் வெளிகொண்டு வந்தன. அந்த நேரத்தில் பத்திரிகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் வெளியேற்ற முடியவில்லை.

ஆனால் பழிவாங்கும் நடவடிக்கையாக பக்தர்களுக்கு இடையூறு என்ற காரணத்தை சொல்லி மீடியா சென்டர் கட்டிடத்தை இடித்து தள்ளினர். பின்னர் இந்த இடத்தில் கடை கட்டி வாடகைக்கு விடப்பட்டது.இப்போது கொரோனாவை காரணம் காட்டி செய்தியாளர்கள் சபரி மலையில் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், தேவசம்போர்டு ஊழியர்கள் சபரிமலை, பம்பையில் தங்கும் போது செய்தியாளர்கள் 100 பேர் தங்குவதால் என்ன கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சபரிமலை விபரங்களை வெளி உலகுக்கு தெரிய விடாமலும், அங்கு நடைபெறும் தவறுகள் வெளிவராமலும் இருக்கும் வகையில் பழிவாங்கும் நடவடிக்கையாக கேரள அரசு இந்த முடிவு எடுத்துள்ளதாக செய்தியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் சபரிமலை தகவல்களை உடனுக்குடன் அறிய முடியாத நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar