* மகிழ்ச்சிக்கான மந்திரச்சாவி நம் மனதில் இருக்கிறது. * முதுமைக்கு தேவையானதை இளமையில் தேட வேண்டும். * கூட்டுப் பிரார்த்தனைக்கு சக்தி அதிகம் என்பதால் தீர்வு உடனே கிடைக்கும். * உண்மையைப் பேசுங்கள். தர்ம வழியில் வாழ்வு நடத்துங்கள். * பெற்றோர், குருநாதரை தெய்வமாக கருதி வழிபடுங்கள். * மாசு இல்லாத மனமே கடவுள் குடியிருக்கும் கோயில். * கடவுளை அன்புடன் வணங்குங்கள். அவரிடம் வியாபாரம் செய்யாதீர்கள். * மலர்ந்த முகத்துடன் அனைவரிடமும் பழகுங்கள். * தர்மவழியில் செலவழித்த பணம், வழிபாட்டில் செலவழித்த நேரம் இரண்டும் நம்முடையது. * காலையில் எழும் போது, உணவு உண்ணும் போது, படுக்கும் போதும் கடவுளை நினையுங்கள். * மானம் காக்கும் ஆடை போல மனதைக் காக்க வழிபாடு அவசியம். * மனிதனின் வாழ்க்கை வீட்டுக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். * பெற்றோரை விட சிறந்தவர் உலகில் யாருமில்லை. * பெரியவர்களை வணங்காவிட்டாலும், அவர்களை அலட்சியப்படுத்தக் கூடாது. * இந்த பிறவியில் செய்யும் நன்மை, தீமைகளை அடுத்த பிறப்பில் அனுபவிக்க நேரிடும். * உறவினர் கைவிடலாம். ஆனால் தானமும், தர்மமும் கைவிடுவதில்லை. * பயிருக்கு முள்வேலி போல் நம் பணத்திற்கு தர்மமே வேலி.