குருவித்துறை குருபகவான் கோயிலில் நாளை லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2020 01:11
சோழவந்தான்; குருவித்துறை குருபகவான் கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு நாளை (நவ.,13) லட்சார்ச்சனை துவங்குகிறது. நவ.,15 இரவு 9:4௯ மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குருபகவான் இடபெயர்ச்சியாகிறார். இதை முன்னிட்டு அனைத்து ராசிகாரர்களுக்கும் பரிகார பூஜையாக நவ.,13 காலை 9:30 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கி நவ.,15 காலை 11:30 மணிக்கு முடிகிறது. ரூ.100 செலுத்தும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். 10 வயதிற்கு கீழ், 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை. முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.