கன்னிவாடி : கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர், உற்ஷவர், நந்திக்கு சந்தனம், பன்னீர், பால், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரம், தேவார, திருவாசக பாராயணத்துடன் மகா தீபாராதனை நடந்தது.கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், சித்தையன்கோட்டை காசிவிசுவநாதர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலிலும் பிரதோஷ பூஜை நடந்தது.