Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் கோவில்களில் ... மூடநம்பிக்கை எனும் இருள் விலகியது! மூடநம்பிக்கை எனும் இருள் விலகியது!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி
எழுத்தின் அளவு:
கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி

பதிவு செய்த நாள்

14 நவ
2020
04:11

சென்னை :தமிழகம் முழுதும் நவ. 16ம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 100 பேருக்கு மிகாமல் பங்கேற்கும் வகையில் கோயில்களில் கும்பாபிஷகம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா தொற்றை தடுக்க மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தமிழகத்தில் மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் மக்கள் ஒத்துழைப்பு காரணமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நோய் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது தமிழகம் முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கால் பல்வேறு வழிபாட்டுத்தலங்களில் பணிகள் முடிந்தும் பல மாதங்களாக கும்பாபிஷேகம் நடத்த முடியாமல் தடைபட்டுள்ளது.

எனவே கும்பாபிஷேகம் நடத்த அனுமதிக்க வேண்டும் என பல தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.அதை பரிசீலனை செய்த அரசு தமிழகம் முழுவதும் நாளை மறுதினம் 16ம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 100 பேருக்கு மிகாமல் பங்கேற்கும் வகையில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி அளித்துள்ளது. கொரோனா நோய் தொற்று ஏற்படாத வகையில் முகக்கவசம் அணிதல் மற்றும் தனி நபர் இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்து விழாக்களை நடத்த வேண்டும்.பொதுமக்கள் நலன் கருதி அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar