Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா ... குருவித்துறையில் குருபெயர்ச்சி விழா: பக்தர்கள் தரிசனம் குருவித்துறையில் குருபெயர்ச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார், பழநியில் சஷ்டி விழா துவங்கியது
எழுத்தின் அளவு:
திருச்செந்துார், பழநியில் சஷ்டி விழா துவங்கியது

பதிவு செய்த நாள்

16 நவ
2020
08:11

 துாத்துக்குடி: திருச்செந்துார் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நேற்று காலை யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

கோவிலில் பக்தர்கள் விரதம் இருக்க அனுமதிக்கப்படவில்லை.திருச்செந்துார் முருகன் கோவிலில் நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.யாகசாலை மண்டபத்தில் காலை, 6:00 மணிக்கு ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் நடந்தது. பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனை, யாகசாலையில் மகா தீபாராதனை நடந்தது. பின் ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் எழுந்தருளினார். விழா நாட்களில் அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. நவ., 20ல் நடக்கும் சூரசம்ஹாரம் கடற்கரைக்கு பதிலாக கோவில் வளாகத்தில் நடக்கிறது. சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நாட்களில் கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.


பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி கோவிலில் நவ., 15 முதல், 21 வரை கந்தசஷ்டி விழா நடக்கிறது. நேற்று மலைக்கோவிலில் உச்சிக்கால பூஜையில் மூலவர், உற்சவர் சின்னக்குமாரசுவாமி, சண்முகர், துவாரபாலகர்கள், மயில், நவவீரர்களுக்கு காப்பு கட்டுதல் நடந்தது.


விரதம் இருக்கும் பக்தர்களும் கையில் காப்பு கட்டினர். நவ., 20ல் சூரசம்ஹாரம் நவ., 21 ல் திருக்கல்யாணம் நடக்கிறது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதிஇல்லை மலையேறிய யானை கந்த சஷ்டி விழாவுக்காக, ஆண்டு முழுதும் பெரியநாயகி அம்மன் கோவிலில் இருக்கும் யானை கஸ்துாரி, கந்தசஷ்டி விழாவிற்காக மட்டுமே பழநி மலைக்கோவிலுக்கு அழைத்து செல்லப்படும். நேற்று விழா துவக்கத்தை முன்னிட்டு யானை கஸ்துாரி யானைப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்றது. விழா முடியும் வரை வெளிபிரகார மண்டபத்தில் தங்கி இருக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதலே, ... மேலும்
 
temple news
மார்கழி பிரதோஷம் சிவ வழிபாட்டிற்கு உகந்த சிறந்த நாள். 2026ம் ஆண்டின் தொடக்கத்திலேயே பிரதோஷம் வருவது ... மேலும்
 
temple news
நாமக்கல்: ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் மூன்று டன் பல்வேறு வகையான ... மேலும்
 
temple news
சென்னை: 2025 ம் ஆண்டு இனிதே நிறைவடைந்து 2026 ம் ஆண்டு பிறந்ததையொட்டி, மக்கள் உலகம் முழுவதும் புதிய ஆண்டை ... மேலும்
 
temple news
சென்னை; 2026ம் ஆண்டின் முதல் நாளான இன்று வடபழநி முருகன் கோவிலில் அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar