Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னிமலை முருகன் கோவிலில் ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சண்முகார்ச்சனை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதிக்கு 20ம் ஆண்டாக பாத யாத்திரை : ஆட்டையாம்பட்டி பக்தர்கள் தொடங்கினர்
எழுத்தின் அளவு:
திருப்பதிக்கு 20ம் ஆண்டாக பாத யாத்திரை : ஆட்டையாம்பட்டி பக்தர்கள் தொடங்கினர்

பதிவு செய்த நாள்

16 நவ
2020
06:11

வீரபாண்டி: ஆட்டையாம்பட்டியில் இருந்து திருப்பதிக்கு, 20வது ஆண்டாக, 20 பக்தர்கள், பாத யாத்திரை தொடங்கினர். சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி சுற்றுவட்டாரங்களை சேர்ந்த குழந்தைகள், பெண்கள் என, 20 பக்தர்கள், திருப்பதி கோவிலுக்கு பாதயாத்திரை செல்ல, கடந்த மாதம் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.


நேற்று முன்தினம் பெத்தாம்பட்டி சென்றாய பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜை செய்து, இருமுடி கட்டி அன்னதானம் செய்தனர். நேற்று காலை, 6:00 மணிக்கு, திருமலை திருப்பதிக்கு பயணத்தை தொடங்கினர். இதுகுறித்து, ௨௦வது ஆண்டாக, பயணம் செல்லும் குருசாமி ராமானுஜதாசர் கூறியதாவது: தினமும் காலை, 3:00 மணிக்கு எழுந்து குளித்து முடித்து தயாராகி, 4:00 முதல், காலை, 10:30 மணி வரை நடைபயணம் செய்வோம். கோவில், மடம், தாசர் வீடுகளில் தங்குவோம். மீண்டும் மாலை, 5:00 மணிக்கு தொடங்கி, இரவு, 11:00 மணி வரை நடப்போம். ஒரு நாளில், 40 கி.மீ., வரை பயணித்து, 10 நாளில் திருமலையை அடைந்து விடுவோம். தரிசனம் முடித்து, மலையில் இருந்து நடந்து வந்து, ரயிலில் ஏறி சேலம் வழியாக ஊர் திரும்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒரகடம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம் ஹாரம் நாளை நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா விமரிசையாக நடந்தது.குன்றத்துார் முருகன் ... மேலும்
 
temple news
வேலுார்: வேலுார், ஸ்ரீபுரம் பொற்கோவில் வளாகத்தில் குருஸ்தானம் பூஜை மண்டபம் திறப்பு விழா மற்றும் மகா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் சாமிநாதன், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ... மேலும்
 
temple news
திருப்பூர்: ‘வனத்துக்குள் திருப்பூர் –11’ திட்டத்தில் நேற்று, சிவன்மலை சுப்பிரமணியர் கோவிலுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar