Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுமன் ஜன்மபூமியான கிஷ்கிந்தையில் 215 ... சபரிமலையில் 41 நாள் மண்டல காலம் தொடங்கியது சபரிமலையில் 41 நாள் மண்டல காலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்பன் கோயிலில் மாலையணிந்த பக்தர்கள்: விரதம் துவக்கம்
எழுத்தின் அளவு:
ஐயப்பன் கோயிலில் மாலையணிந்த பக்தர்கள்: விரதம் துவக்கம்

பதிவு செய்த நாள்

17 நவ
2020
08:11

ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மாலையணிந்து முதல் நாள் விரதத்தை துவக்கினர். அதிகாலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. ஐயப்பன் பக்தி பாடல்கள், நாமாவளி, ஸ்தோத்திரம் செய்து வழிபட்டனர். வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்சமாதா ஆகிய மூலவர்கள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.கோயில் தலைமை குருசாமி மோகன்சாமி கூறுகையில், கார்த்திகை முதல் மார்கழி வரையுள்ள 60 நாட்களும் இரவு நேரத்தில் பஜனையும் ஞாயிற்றுக்கிழமை உலக நன்மைக்கான கூட்டுப்பிரார்த்தனை, அன்னதானம் நடக்க உள்ளது.

சபரிமலையில் கடைப்பிடிப்பதை போன்ற சுயகட்டுப்பாடு, ஒழுக்க நெறியுடன் போதிக்கப்படுகிறது என்றார். ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

* சாயல்குடி அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில் ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதத்தை துவக்கினர்.

* சிக்கல் சிவதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதம் மேற்கொண்டனர். நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது.

* கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து கொண்டனர். குருநாதர் நாகராஜ் ஏற்பாடுகளை செய்திருந்தார்.ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் வல்லபை ஜயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு மாலை அணிந்த ஜயப்ப பக்தர்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டிவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான  ... மேலும்
 
temple news
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கந்தசஷ்டி மற்றும் வார விடுமுறை என்பதால், ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் ... மேலும்
 
temple news
 நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கலில், அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar