Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கைலாசநாதர் கோவிலில் இன்று ... திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கழுகுமலை தூய லூர்தன்னை தேவாலய திருவிழா: இன்று மாதா பவனி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2012
10:05

கழுகுமலை: கழுகுமலை தூய லூர்தன்னை தேவாலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (மே.26) மாதாவின் திருவுருவ பவனி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத்தலமான கழுகுமலைக்கு மலைக்குன்று மற்றும் கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயில் ஆகியவை உலகப்பிரசித்தி பெற்றவை. மேலும் இச்சிறப்புகளை காணவரும் சுற்றுலாவாசிகள் தவறாமல் காண விரும்பும் மற்றொரு சிறப்பம்சம் இரட்டை கோபுரங்களை கொண்டு நூற்றாண்டு பாரம்பரியமிக்க தூய லூர்தன்னை தேவாலயமாகும். இத்தேவாலயத்தின் இரட்டை கோபுரங்கள் கடந்தாண்டு டிச.25ந்தேதி புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிப்பு விழா நடத்தப்பட்டது. மேலும் இத்தேவாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஆலயத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு திருவிழா கடந்த 18ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்த சபைகள், இயக்கங்கள் வழியாக, பைபிளின் ஒவ்வொரு கருத்தை மையப்படுத்தி சிறப்பு திருப்பலிகளும், வழிபாடுகளும் நடந்தன. இந்நிலையில் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று லூர்து மாதாவின் திருவுருவ பவனி விழா நடக்கிறது. மேலும் நாளை (மே.27) நற்கருனைப் பவனியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதில் இன்று மாலையில் சிறப்பு வழிபாடுகளுடன் புதிய குருக்கள் இம்மானுவேல் ஜெகன்ராஜா, லூர்து மிக்கேல் வில்சன், வினோத் பால்ராஜ், விக்டர் ராஜ் ஆகியோரது தலைமையில் ஆடம்பர திருவிழா திருப்பலி நடக்கிறது.

இதில் இறையாட்சி அந்நியன் கலாச்சாரமா அல்லது அயலான் கலாச்சாரமா என்ற தலைப்பில் பைபிள் மறையுரையும், திருப்பலியும் இலொயோலா இளைஞர் இயக்கம் மற்றும் வெளியூரில் வசிக்கும் கழுகுமலை இறைமக்கள் சார்பில் நடக்கிறது. இதையடுத்து நாளை மாலை ஜார்ஜ் அடிகளார் தலைமையில் லூர்து அன்னை உன் பாதம் போகும் பாதையில் என்ற தலைப்பில் பங்கு இறைமக்கள், புதுநன்மை பெறுவோர் மற்றும் பங்குப்பேரவையினர் சார்பில் ஆடம்பர திருப்பலியும், மறையுரையும், நற்கருனை பவனியும் நடக்கிறது. இதில் திருச்சி கப்புச்சின் சபை அன்பின் அமலன் அடிகளார் மற்றும் கோவில்பட்டி திருத்தொண்டர் ஜோசப் வர்கீஸ் ஆகியோர் பைபிள் குறித்து பேசுகின்றனர். ஏற்பாடுகளை தூய லூர்தன்னை தேவாலய பங்குத்தந்தை லாரன்ஸ் அடிகளார் தலைமையில், திருத்தொண்டர் பிரான்சிஸ் சேவியர், பங்கு அருட்பணிப் பேரவை, துறவிகள், பக்த சபைகள், அன்பியங்கள் ஆகியவற்றை சேர்ந்தோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி கோயிலில், பரிவேட்டை குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar