Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவில் ... பழவூர் நாறும்பூநாத சுவாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரிமங்கலம் மஹா சக்தி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2012
10:05

காரிமங்கலம்: காரிமங்கலம் 14வது வார்டு வெள்ளையன்கொட்டாவூர் ஸ்ரீ மஹாசக்தி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.ஸ்ரீ மஹாசக்தி மாரியம்மன் கோவிலில் ஸ்ரீ செல்வவிநாயகர், ஸ்ரீ பாலமுருகர், ஸ்ரீ அக்குமாரியம்மன், ஸ்ரீ நவகிரக மூர்த்திகள் ஆகிய கோவில்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இந்த கோவில்கள் கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 23ம் தேதி காலை 7 மணிக்கு மங்கல இசையும், 9 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புன்னியாவாசனம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தீபாராதனை, கங்கனம் கட்டுதல் மற்றும் கொடியேற்றுதல் நடந்தது.மாலை 4.30 மணிக்கு ராமசாமி கோவிலில் இருந்து மாரியம்மனுக்கு தீர்த்த குடம் எடுத்து வருதல், 6 மணிக்கு கரிக்கோள ஊர்வலமும், கணபதி பூஜை, வாஸ்துசாந்தி, ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலசஸ்தாபனம், முதல் கால யாகபூஜை, தீபாராதனை நடந்தது.கடந்த 24ம் தேதி காலை இரண்டாம் கால யாகபூஜை, சிவசூரிய பூஜை, பஞ்ச கவ்வியம், மகா கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, நெய்வேதியம், தீபராதனையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழப்பட்டது.காலை 11 மணிக்கு புற்று மண் எடுத்தல், கோபுர கலசத ஸ்தாபனம், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, அஸ்த கணபதி ஹோமம், ஸ்ரீ நவகிரக ஹோமம், மஹா தீபராதனை நடந்தது.இரவு 10 மணிக்கு ஸ்ரீ மஹா சக்தி மாரியம்மன், செல்வ விநாயகர், பாலமுருகர், அக்குமாரியம்மன், நவகிரக மூர்த்திகள், பிரதிஷ்டை அஷ்டபந்தனம் நடந்தது. நேற்று காலை 6.30 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, யாத்திரா தானம், கலச புறப்பாடும், 9.30 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.ஸ்ரீ அருணேஸ்வரர் மலைக்கோவில் குருக்கள் பட்டாபிராமன் தலைமையில் சிவச்சாரியர்கள் மஹா கும்பாபிஷேகத்தை நடத்தினர். பக்தர்களுக்கு காலை முதல் இரவு வரை அன்னதானம் நடந்தது.காலை 10.30 மணிக்கு மஹா அபிஷேகம், திவ்ய அலங்காரம், லலிதா சகஸ்ரநாமம், மஹா தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு ஸ்ரீ மஹா சக்தி மாரியம்மன் திருக்கல்யாண உற்சவம், தீபராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு குத்துவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் திருவீதி உலா வாணவேடிக்கையுடன் நடந்தது.அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன், டவுன் பஞ்சாயத்து சேர்மன் சத்யா, முன்னாள் சேர்மன் ராமன், தி.மு.க., நகர செயலாளர் சீனிவாசன், வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் இன்பசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  திருவூடல் உற்சவ நிறைவு விழாவை யொட்டி,  உண்ணாமுலையம்மன் சமேத ... மேலும்
 
temple news
பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, ... மேலும்
 
temple news
பல்லடம்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், ரோட்டில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar