தீபாவளியன்று குளிக்கும் நீரில் கங்காதேவி ஐக்கியமாகிறாள். இதனால் நாம் வீட்டில் குளித்தாலும் கங்கையில் நீராடிய புண்ணியத்தை பெறலாம். இதனடிப்படையில் தீபாவளியன்று ஒருவருக்கொருவர் ‛கங்கா ஸ்நானம் ஆச்சா’ என்று கேட்கும் வழக்கம் உண்டானது. முற்றும் துறந்த முனிவருக்கும் தீபாவளி குளியல் அவசியம். கங்கா ஸ்நானத்தால் பாவம் நீங்கி புனிதம் அடைகிறோம்.