* தொழில், வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தீபாவளியன்று லட்சுமியை வழிபடுவர். வீடு முழுவதும் மாலை நேரத்தில் வரிசையாக தீபங்களை ஏற்றுவர். * அமிர்தசரஸ் பொற்கோயிலில் தீபாவளியன்று லட்சக்கணக்கில் தீபங்களை ஏற்றுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். * உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் கோவர்த்தன விரதம் மேற்கொள்வர். கால்நடைவளர்ப்பு, விவசாயத்தில் லாபம் பெருகுவதற்காக கிருஷ்ணரையும், பசுக்களையும் வழிபடுகின்றனர். * ராவணவதம் முடித்த ராமன் அயோத்தி திரும்பிய நாள் தீபாவளி. சீதாராமரை வரவேற்கும் விதத்தில் அயோத்தி மக்கள் வீடெங்கும் தீபமேற்றி வைத்தனர்.