Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொரோனா சோதனையில் நெகட்டிவ்: ... கள்ளந்திரியில் கல்திட்டை, திருமங்கலத்தில் நடுகல் கண்டுபிடிப்பு கள்ளந்திரியில் கல்திட்டை, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லண்டனில் மீட்ட சிலைகள் போலீசிடம் ஒப்படைப்பு
எழுத்தின் அளவு:
லண்டனில் மீட்ட சிலைகள் போலீசிடம் ஒப்படைப்பு

பதிவு செய்த நாள்

19 நவ
2020
09:11

சென்னை: லண்டனில் இருந்து, 42 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்ட, தமிழக கோவில் சிலைகளை, மத்திய கலாசார துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தார். மயிலாடுதுறை மாவட்டம், அனந்தமங்கலத்தில், ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்து, 1978ம் ஆண்டில், ராமர், சீதை, லட்சுமணன் சிலைகள் திருடு போயின. இந்த சிலைகள், பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு கடத்தப்பட்டது, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது.

இது குறித்த வரலாறு மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன், லண்டனில் உள்ள இந்திய துாதரகத்திற்கு தகவல் தெரிவித்தனர். துாதரக அதிகாரிகள், லண்டன் போலீசில் புகார் அளித்தனர்.இந்த சிலைகள், லண்டனில் உள்ள, டீலர் ஒருவரிடம் இருப்பது பற்றி, சிங்கப்பூரில் வசித்து வரும், சிலைகள் மீட்பு பணிக்குழு நிர்வாகி விஜயகுமார் என்பவர் வாயிலாக, போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, அந்த டீலரிடம் லண்டன் போலீசார் விசாரித்தனர். அவர் சிலைகளை ஒப்படைத்து விடுவதாக கூறினார். அதன்படி, 42 ஆண்டுகளுக்கு முன் திருடுபோன, ராமர் உள்ளிட்ட மூன்று சிலைகளும் செப்டம்பரில் மீட்கப்பட்டன. அதன்பின், பிரிட்டன் அரசு, சிலைகளை, மத்திய அரசிடம் முறைப்படி ஒப்படைத்தது. அந்த சிலைகளை, டில்லியில் தொல்லியல் துறை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய கலாசார துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, கூடுதல் டி.ஜி.பி., அபய்குமார் சிங் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். பின், மத்திய அமைச்சர் பிகலாத் சிங் படேல் கூறுகையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட, 40க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளிட்ட கலைப் பொக்கிஷங்களை மீட்டுள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், லட்சார்ச்சனை நேற்று நடந்தது. மாசி மாத ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள க்ஷேத்ரபாலகத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ருத்ரனுக்கு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar