Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொரோனா சோதனையில் நெகட்டிவ்: ... கள்ளந்திரியில் கல்திட்டை, திருமங்கலத்தில் நடுகல் கண்டுபிடிப்பு கள்ளந்திரியில் கல்திட்டை, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லண்டனில் மீட்ட சிலைகள் போலீசிடம் ஒப்படைப்பு
எழுத்தின் அளவு:
லண்டனில் மீட்ட சிலைகள் போலீசிடம் ஒப்படைப்பு

பதிவு செய்த நாள்

19 நவ
2020
09:11

சென்னை: லண்டனில் இருந்து, 42 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்ட, தமிழக கோவில் சிலைகளை, மத்திய கலாசார துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தார். மயிலாடுதுறை மாவட்டம், அனந்தமங்கலத்தில், ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்து, 1978ம் ஆண்டில், ராமர், சீதை, லட்சுமணன் சிலைகள் திருடு போயின. இந்த சிலைகள், பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு கடத்தப்பட்டது, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது.

இது குறித்த வரலாறு மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன், லண்டனில் உள்ள இந்திய துாதரகத்திற்கு தகவல் தெரிவித்தனர். துாதரக அதிகாரிகள், லண்டன் போலீசில் புகார் அளித்தனர்.இந்த சிலைகள், லண்டனில் உள்ள, டீலர் ஒருவரிடம் இருப்பது பற்றி, சிங்கப்பூரில் வசித்து வரும், சிலைகள் மீட்பு பணிக்குழு நிர்வாகி விஜயகுமார் என்பவர் வாயிலாக, போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, அந்த டீலரிடம் லண்டன் போலீசார் விசாரித்தனர். அவர் சிலைகளை ஒப்படைத்து விடுவதாக கூறினார். அதன்படி, 42 ஆண்டுகளுக்கு முன் திருடுபோன, ராமர் உள்ளிட்ட மூன்று சிலைகளும் செப்டம்பரில் மீட்கப்பட்டன. அதன்பின், பிரிட்டன் அரசு, சிலைகளை, மத்திய அரசிடம் முறைப்படி ஒப்படைத்தது. அந்த சிலைகளை, டில்லியில் தொல்லியல் துறை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய கலாசார துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, கூடுதல் டி.ஜி.பி., அபய்குமார் சிங் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். பின், மத்திய அமைச்சர் பிகலாத் சிங் படேல் கூறுகையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட, 40க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளிட்ட கலைப் பொக்கிஷங்களை மீட்டுள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சோளிங்கர்; யோக நரசிம்ம சுவாமியின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில் கோடை உத்சவம், இன்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை;  உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் குருபூர்ணிமா விழா நடந்தது. அதனை முன்னிட்டு ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவில் இறைவனுக்கு அம்மையார் அமுதுபடைக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar