திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டிவிழாவின் நான்காம் நாள் விழாவில் சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.அதனையொட்டி, கோவிலில் உள்ள முருகன் சன்னதியில் நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு விசேஷ அபிஷேக, அலங்காரம், 9:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமானுக்கு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு ஸ்கந்த ஹோமம், மகா பூர்ணாகுதி, உற்சவ மூர்த்திக்கு லட்சார்ச்சனை, சோடசோபவுபசார தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 20ம் தேதி கந்தசஷ்டி சூரசம்ஹாரம், 21ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.