திருப்பரங்குன்றம் : தென் திருப்பதி என்றழைக்கப்படும் ஸ்ரீவில்லிப்புத்துார் திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை விளாச்சேரியில் களிமண் மெகா அகல் விளக்குகள் தயாராகின்றன.
இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் களிமண், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், காகிதகூழ், சிமென்ட் மூலம் சீசனுக்கு ஏற்ப பொம்மைகள் தயாரிக்கின்றனர். கார்த்திகை மாதத்தை முன்னிட்டு களிமண்ணால் 3 இஞ்ச் முதல் அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் கார்த்திகை தீபத்திற்காக, 2 அடி உயரம், 2 அடி அகலத்தில் 6 மெகா சைஸ் அகல் விளக்குகள் களிமண்ணில் தயாரிக்கப்படுகிறது.சாம்பசிவம்: இது எங்கள் பரம்பரை தொழில். 27 ஆண்டுகளாக திருவண்ணாமலைக்கு அனுப்புகிறோம். களிமண்ணலான இவ்விளக்கு 30 லிட்டர் எண்ணெய் பிடிக்கும். மூன்று நாட்கள் தொடர்ந்து எரியும்.இத்துடன் 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு அடி உயரத்தில் 25 விளக்குகளும், 100 மில்லி கொள்ளளவு கொண்ட 3 ஆயிரம் விளக்குகளும் திருவண்ணாமலை தீபத்திற்காக தயாரிக்கப்படுகிறது என்றார்.