திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2020 04:11
மதுரை: முருகப்பெருமானின் முதல்படைவீடு என்னும் சிறப்புப் பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருப்பரங்குன்றத்தில் பத்து நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபவிழாவில் இன்று காலை கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 28ம் தேதி பட்டாபிஷேகம் நடைபெறும். 29ம் தேதி மாலையில் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டு மலைமீது மகாதீபம் ஏற்றப்படுகிறது.