Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுவாமிமலையில் கார்த்திகை திருவிழா ... பச்சமலையில் சூரசம்ஹாரம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலம் முருகன் கோவில்களில் பக்தர்கள் இல்லாமல் சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2020
05:11

சேலம்: முருகன் கோவில்களில், பக்தர்கள் இல்லாமல், சூரனை முருகன் வதம் செய்யும் நிகழ்வு நடந்தது. சேலம், உடையாப்பட்டி, கந்தாஸ்ரமத்தில், சூரசம்ஹார விழாவையொட்டி, நேற்று மாலை, முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து, சூரபத்மனை வதம் செய்யும் சம்ஹாரம் நடந்தது. இதில், குறைந்த அளவில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். பேர்லேண்ட்ஸ் முருகன் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார். அம்மாபேட்டை, குமரகிரி தண்டாயுதபாணிக்கு, 1,008 லிட்டர் பால் அபி ?ஷகம், சிறப்பு பூஜை நடந்தது. அம்மாபேட்டை, செங்குந்தர் குமரகுரு சுப்ரமணியருக்கு, முத்தங்கி கவச சாத்துபடி, கந்த சஷ்டி பாராயணம் நடந்தது. இதில், நிர்வாகிகள் மட்டும் வழிபட்டனர்.

ஊத்துமலை முருகன், செவ்வாய்ப்பேட்டை, சித்திரைச்சாவடி முருகன், ஏற்காடு ஆறுபடை முருகன், ஜாகீர்அம்மாபாளையம், காவடி பழனியாண்டவர் ஆசிரமம் ஆகியவற்றில், சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்வு, பக்தர்கள் இல்லாமல் நடத்தப்பட்டது. இன்று, அனைத்து முருகன் கோவில்களில் திருக்கல்யாணம் நடக்கிறது.

வெற்றிவேல், வீரவேல் கோஷம்: சேலம் அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், சூரசம்ஹார நிகழ்ச்சி, கோவிலுக்கு உள்ளேயே நடந்தது. இதில், பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மாலை, கையில் சக்திவேல் ஏந்தியபடி, கந்தசாமி போர்க்கோலத்தில் எழுந்தருளினார். அவருக்கு எதிரே, அசுரர்கள் போர் செய்ய காத்திருந்தனர். இதைக்காண, திரளான பக்தர்கள் கோவில் முன் குவிந்தனர். அவர்கள், கோவில் உள்ளே நடக்கும் நிகழ்ச்சிகளை, பெரிய திரைகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அரோகரா, வெற்றிவேல், வீரவேல் கோஷம் முழங்க, கந்தசாமி கோவிலை சுற்றிவந்து, ஒவ்வொரு திசையில் யானை முக சூரன், சிங்கமுக சூரன், ஆடுமுக சூரன் இறுதியாக சூரபத்மனை, சக்திவேல் கொண்டு அழித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; ஐப்பசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அம்மாவாசை தீர்த்தவாரி ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் நடந்த வைபவத்தில் அதிகாலையில் ... மேலும்
 
temple news
சிவகங்கை; மா‌னாமதுரை வட்டம் கட்டிக்குளம், ஸ்ரீ சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் கோயிலில் அமாவாசையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar