பதிவு செய்த நாள்
21
நவ
2020
05:11
கோபி: கோபி பச்சமலையில் சூரசம்ஹாரம், குரு பெயர்ச்சி விழா கோலாகலமாக நடந்தது. கோபி பச்சமலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா, கடந்த, 15ல் துவங்கியது. விழா முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் இன்று நடந்தது. இதையொட்டி உற்சவர் மற்றும் மூலவருக்கு, காலையில் ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. இதையடுத்து, 8:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடந்தது. பின் மகன்யாச அபிஷேகம், சண்முகர் அர்ச்சனை, பன்னீர் அபிஷேகம் நடந்தது. தவிர குரு பெயர்ச்சி விழாவாக, 108 சங்காபிஷேம், பரிகார ?ஹாமம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* அந்தியூர், தேர்வீதியில் உள்ள, சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று நடந்த, சூரசம்ஹார விழாவை, ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்தனர்.
* ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், சூரசம்ஹார விழா நேற்று நடந்தது. முன்னதாக காலையில் யாகபூஜை நடந்தது. இதையடுத்து மாலையில் சூரவதம் செய்யும், சூரசம்ஹாரம் நடந்தது. எளிமையாக நடந்த விழாவில் சிவாச்சாரியார்கள் புடைசூழ, வலம் வந்த முருகப்பெருமான், சூரனை வதம் செய்தார்.