Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அவலுார்பேட்டையில் கந்த சஷ்டி விழா அருணாசலேஸ்வரர் கோவிலில் கூடுதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
28, 29ல் திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர் பக்தர்கள் வர தடை: கலெக்டர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2020
05:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகருக்குள், வரும், 28, 29ல் வெளியூர் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது, என, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

இது குறித்து அவர், நிருபர்களிடம் மேலும் கூறியதாவது: கார்த்திகை தீப திருவிழாவுக்கு, வரும், 20ல்(நாளை) அதிகாலை, 5:30 முதல், 7:30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. டிச., 3 வரை, 13 நாட்கள், பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும். வரும், 26ல் பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம், ஆகம விதிப்படி கோவில் வளாகத்துக்குள் நடக்கும். விழா நாட்களில், ஆன்லைன் மூலம், 5,000 பேர், ஆன்லைனில் பதிவு செய்யாத பக்தர்கள், முன்னுரிமை அடிப்படையில், 3,000 பேர் என, நாள் ஒன்றுக்கு, 8,000 பேர், காலை, 6:30 முதல் மாலை, 6:30 மணி வரை, ஆறு கட்டங்களாக, சமூக இடைவெளியுடன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். தீப திருவிழாவுக்கு ஸ்பெஷல் பஸ் இயக்கப்படாது. வரும், 28 மற்றும், மஹா தீபம் நடக்கும், 29ல் வெளியூர் பக்தர்கள் திருவண்ணாமலைக்குள் வர தடை விதிக்கப்படுகிறது. நகர எல்லைக்குள், 18 இடங்களில் செக்போஸ்ட் அமைத்து, அங்கேயே தடுக்கப்படுவர். திருவண்ணாமலை நகரத்தை சேர்ந்தவர்கள் வர தடை இல்லை. அவர்கள், தங்கள் அடையாள ஆவணங்களை செக்போஸ்டில் காண்பிக்க வேண்டும். மேலும், 28, 29ல் கிரிவலம் செல்ல தடை செய்யப்படுகிறது. மஹா தீபத்தன்று கோவில் வளாகத்தில், பக்தர்களுக்கு அனுமதியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, 16 கால் மண்டபம் அருகில் கார், வேன், பேருந்து உள்ளிட்ட ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும், வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது.கோபால்பட்டி அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar