Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அவலுார்பேட்டையில் கந்த சஷ்டி விழா அருணாசலேஸ்வரர் கோவிலில் கூடுதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
28, 29ல் திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர் பக்தர்கள் வர தடை: கலெக்டர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2020
05:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகருக்குள், வரும், 28, 29ல் வெளியூர் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது, என, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

இது குறித்து அவர், நிருபர்களிடம் மேலும் கூறியதாவது: கார்த்திகை தீப திருவிழாவுக்கு, வரும், 20ல்(நாளை) அதிகாலை, 5:30 முதல், 7:30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. டிச., 3 வரை, 13 நாட்கள், பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும். வரும், 26ல் பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம், ஆகம விதிப்படி கோவில் வளாகத்துக்குள் நடக்கும். விழா நாட்களில், ஆன்லைன் மூலம், 5,000 பேர், ஆன்லைனில் பதிவு செய்யாத பக்தர்கள், முன்னுரிமை அடிப்படையில், 3,000 பேர் என, நாள் ஒன்றுக்கு, 8,000 பேர், காலை, 6:30 முதல் மாலை, 6:30 மணி வரை, ஆறு கட்டங்களாக, சமூக இடைவெளியுடன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். தீப திருவிழாவுக்கு ஸ்பெஷல் பஸ் இயக்கப்படாது. வரும், 28 மற்றும், மஹா தீபம் நடக்கும், 29ல் வெளியூர் பக்தர்கள் திருவண்ணாமலைக்குள் வர தடை விதிக்கப்படுகிறது. நகர எல்லைக்குள், 18 இடங்களில் செக்போஸ்ட் அமைத்து, அங்கேயே தடுக்கப்படுவர். திருவண்ணாமலை நகரத்தை சேர்ந்தவர்கள் வர தடை இல்லை. அவர்கள், தங்கள் அடையாள ஆவணங்களை செக்போஸ்டில் காண்பிக்க வேண்டும். மேலும், 28, 29ல் கிரிவலம் செல்ல தடை செய்யப்படுகிறது. மஹா தீபத்தன்று கோவில் வளாகத்தில், பக்தர்களுக்கு அனுமதியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
ஜம்மு: புனித அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் முதல் குழு புறப்பட்டு சென்றது. பயங்கரவாதிகள் ... மேலும்
 
temple news
சேவூர்; அவிநாசி அருகேயுள்ள சேவூரில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar