புதுச்சேரி: நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார பெருவிழா நடந்தது.நெட்டப்பாக்கம், பர்வத வர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத செல்வமுத்துக்குமார சுவாமிக்கு கந்தசஷ்டி பெருவிழா கடந்த 14 ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடைபெற்று வந்தது.முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. அதில் செல்வமுத்துகுமாரசாமி விஸ்வரூபம் எடுத்து சூரபத்மனை சம்ஹாரம் செய்தார்.நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று காலை தீர்த்தவாரி, பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிேஷகம் நடந்தது. இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று காலை மஞ்சள்நீர் உற்சவம் நடக்கிறது.