நத்தம் : நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி நிறைவு நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நேற்று நடந்தது. நவ.15 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. ஊரடங்கு காரணமாக வழக்கமான விழா நிகழ்ச்சிகள் நடக்கவில்லை. தினந்தோறும் 16 வகை அபிேஷகங்கள் மற்றும் தீபாராதனை நடந்தது. அபிேஷக நிகழ்ச்சிகளுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வழக்கமான தரிசனத்திற்கு அரசு வழிகாட்டுதல்படி அனுமதிக்கப்பட்டனர். நேற்று அதிகாலை சஷ்டி விழா நிறைவாக திருக்கல்யாணம் நடந்தது. மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகங்களை தொடர்ந்து ராஜ அலங்காரம் செய்விக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.