குன்னுார்: குன்னூர் எல்லநள்ளி சாய் கைலாஷ் சத்ய சாய்பாபாவின், 95வது பிறந்தநாள் விழா எளிமையாக கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர்- ஊட்டி சாலை எல்லநள்ளி அருகே அமைந்துள்ள சாய் கைலாஷில், நேற்று அதிகாலை, ஒம்காரம், சுப்ரபாதம், அஷ்டோத்திரம் ஆகியவை இடம் பெற்றது. கொரோனாவில் இருந்து மீளவும், உலகம் முழுவதும் சுபிட்ஷம் பெறவும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அரசின் விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. சாய் பக்தர்களின் வீடுகளில் சிறப்பு பூஜைகள் நடத்தி பிரார்த்தனை செய்தனர். நீலகிரி மாவட்ட சத்ய சாய் சேவா தலைவர் சுந்தர்ராஜ் கூறுகையில், "உலக நன்மைக்காகவும், கொரோனா பாதிப்பில் இருந்து மீளவும் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது." என்றார்.