பதிவு செய்த நாள்
23
நவ
2020
04:11
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், பக்தர்களுடன் வரிசையில் சென்று, அறநிலையத்துறை கமிஷனர் சுவாமி தரிசனம் செய்தது, அனைத்து தரப்பினரின் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக அறநிலையத்துறை கமிஷனர் பிரபாகர். இவர், பொறுமை, சிந்தித்து செயல்படுவது, அனைவரையும் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது என, சமார்த்தியமாக செயல்படுகிறார். இதனால், அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்களின் நன்மதிப்பை, அவர் பெற்றுள்ளார்.பத்திரிக்கை, ஊடக செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அதற்கு உரிய பதில் அளிக்க உத்தரவிட்டார். பக்தர்கள் கோரிக்கை, குறைகளை போக்கும் வகையில், நவீன வசதிகளுடன் சிறப்பு பிரிவு துவக்கியுள்ளார். சில நாட்களுக்கு முன் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், அவரை ஆன்மிக நல விரும்பிகள் மட்டம் தட்டி பேசினாலும், மிகவும் பெருந்தன்மையுடன் சகித்துக் கொண்டார்.சமீபத்தில், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், கொரானா தொற்றுக்கான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என, ஆய்வுக்கு சென்ற கமிஷனர் பிரபாகர், பக்தர்களோடு பக்தர்களாக வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.இது, ஆன்மிகவாதிகள் மற்றும் பக்தர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. - நமது நிருபர் -