நரிக்குடி: நரிக்குடி கீழ இடையான்குளம் வயல்வெளி பகுதியில் பழங்கால சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பட்டா நிலத்தில் இருந்ததால் இதனை அப்பகுதி மக்கள் பெரிய அளவில் சாமி கும்பிட முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் வரத்து கால்வாயில் வரும் தண்ணீரை பங்கீடு செய்வதில் இரு கிராமத்தினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக ஆய்வு செய்ய வந்த கலெக்டர் கண்ணனிடம் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நேரில் சென்று பார்வையிட்ட கலெக்டர், தொல்லியல் துறை அதிகாரிகளை ஆய்வு செய்ய அனுப்புவதாகவும், அவர்களுக்கு இப்பகுதி மக்கள் தகுந்த ஒத்துழைப்பை தர வேண்டும் என கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டுக்கொண்டார். அதன் பிறகே சிலை குறித்த விவரங்கள் தெரிய வரும்.