வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், காசிவிஸ்வநாதருக்கு, 108 சங்காபிஷேக வழிபாடு நடந்தது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள, காசிவிஸ்வநாதர் சன்னதியில் கார்த்திகை மாத இரண்டாவது திங்கள் கிழமையான நேற்று முன் தினம் மாலை, 6:30 மணிக்கு சங்காபிஷேக விழா நடந்தது.அதனை தொடர்ந்து, சங்காபிஷேக பூஜையில் சங்குபூஜை, ஹோமம், வேதபாராயணம் ஆகியவை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, 108 வலம்புரி சங்குகளுடன் பக்தர்கள் கோவிலை வலம் வந்து காசிவிஸ்வநாருக்கு அபிஷேகம் செய்தனர்.காசிவிஸ்வநாதருக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. சங்காபிஷேக விழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.