பதிவு செய்த நாள்
24
நவ
2020
02:11
சென்னை : இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், புத்தாண்டை ஒட்டி, சீரடிக்கு, பாபா தரிசன யாத்திரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில், திருநெல்வேலியில் இருந்து, ஜனவரி, 5ம் தேதி புறப்பட்டு, மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை, எழும்பூர் வழியாக, மஹாராஷ்டிரா மாநிலம், சீரடி சென்றடையும். இப்பயணத்தில், சீரடி பாபா கோவில், பண்டரிபுரம் பாண்டுரங்கன் மற்றும் ஆந்திர மாநிலம், மந்த்ராலாயம் ராகவேந்தர் கோவில்களுக்கு சென்று வரலாம்.டிக்கெட் முன்பதிவை, ஆன்லைனில் செய்யலாம். ஆறு நாள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 5,685 ரூபாய் கட்டணம். உணவு, தங்குமிடம், உள்ளூர் வாகன பயண செலவுகள் கட்டணத்தில் அடங்கும்.மேலும் தகவலுக்கு, சென்னை, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40680; மதுரை அலுவலகத்தை, 82879 31977 என்ற, மொபைல் போன் எண்களிலும், www.irctctourism.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.