உலகம் அழிவை நெருங்கும் போது என்னென்ன நடக்கும் என்பதை இறைவன் முன்னறிவிப்பு செய்துள்ளான். * ‘காலம் சுருங்கும்’ எந்தளவுக்கு என்றால் ஓராண்டு ஒரு மாதம் போலவும், ஒரு மாதம் ஒரு வாரமாகவும், ஒரு வாரம் ஒரு நாளாகவும், ஒருநாள் ஒரு மணி நேரமாகவும், ஒரு மணி நேரம் ஒரு நிமிடம் போலவும் சுருங்கி விடும். * பெண்கள் வீதிகளில் நின்று விபசாரம் நடத்துவர். பகிரங்கமாக ஆண்களை அழைத்தாலும் யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். அப்போது நல்லவன் யாரெனில், இதைக் கொஞ்சம் மறைத்து செய்யக் கூடாதா? எனச் சொல்பவன் தான். * ஆண்களுக்கு இருக்கும் வெட்கம் கூட பெண்களுக்கு இருக்காது. * மனிதர்கள் மது அருந்துவது தாறுமாறாக அதிகமாகும். அது இல்லாமல் யாராலும் இருக்க முடியாது. * அருகதையற்ற தீயவர்கள் தலைமைப் பதவிகளில் வீற்றிருப்பர். அநியாயக்காரகாரர்களை மக்கள் பொருளுக்காக பாராட்டி பேசுவர். * சங்கீத உபகரணங்கள் அதிகரிக்கும். இசையில் மயங்குபவர்களின் எண்ணிக்கை பெருகும். * எதற்காக யார் எப்படி செய்தார்கள் என்பது தெரியாத அளவுக்கு கொலைகள் அதிகமாகும். * உலக சுகங்களுக்காக ஒருவருக்கொருவர் போட்டியிடுவர். * பூகம்பம் அதிகம் ஏற்படும். * பருவ மழை பெய்யாமல் போகும். * திடீர் மரணங்கள் அதிகரிக்கும். * பெருமைக்காக வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படும். * இட நெருக்கடியால் மக்கள் அவதிப்படுவர். ஒரே இடத்தில் மக்கள் குவிவதால் கட்டிடங்கள் உயரமாகும் * வியாபாரிகள் சூழ்ச்சியால் பணம் சம்பாதிப்பர்.