திருச்சி மாவட்டம், அன்பில் என்னும் ஊரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள கைலாசநாதர் கோயிலில் வலது கரத்தில் சூலாயுதத்தையும் இடது கரத்தில் வில்லையும் ஏந்தி வித்தியாசமான கோலத்தில் கருடவாகனத்தில் காட்சி தருகிறார், சனி பகவான். சனிகிரக பாதிப்புகளால் அவதிப்படுவோர் இங்கு வந்து அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால் அவர்களின் துயர் குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.