சிவனுக்குப் பிரியமுள்ள ராத்திரியே சிவன் ராத்திரி. சிவராத்திரி என்பதில் சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் இன்பம் என்று பொருள் கொள்ளலாம். எனவே, சிவராத்திரி என்றால் ஒளிமயமான இரவு இன்பம் தருகின்ற இரவு என்றெல்லாம் அழைக்கலாம். சிவராத்திரியில் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியே மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. மக்கள் அவரவர் குலதெய்வங்களையும் வழிபாடு செய்ய வருடத்தில் ஒரு நாளாக இந்த சிவராத்திரி நாளையே தேர்ந்தெடுத்து வழிபட்டு வருகின்றனர்.