சபரிமலை: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில், மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, மூலிகை குடிநீர் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. சுக்கு, வெட்டிவேர் போன்ற மூலிகைகளால் கொதிக்கவைக்கப்பட்ட அந்த நீர், ஸ்டீல் பாட்டில்களில் வழங்கப்படுகிறது. பம்பாவில், 200 ரூபாய், டிபாசிட் செலுத்தி வாங்கிக் கொள்ளவும்; கோவிலில் இருந்து திரும்பும்போது, அந்த பாட்டிலை கொடுத்து டிபாசிட் தொகையை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.