பதிவு செய்த நாள்
26
நவ
2020
03:11
பரமக்குடி ; கார்த்திகை தீப திருநாள் நவ., 29 அன்று கொண்டாடப்படவுள்ளநிலையில், பரமக்குடியில் வண்ண, வண்ண அகல் விளக்குகள்விற்பனை துவங்கியுள்ளது.
கார்த்திகை என்றாலே விளக்குகளின் வரிசை தான்ஞாபகத்திற்கு வரும். அந்த வகையில் பரமக்குடியில் உள்ளசிவன், முருகன் கோயில்களில் நவ.,29ல் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப்பனை எரிக்கப்படும்.தொடர்ந்து மறுநாள் பெருமாள் கோயில்களில் பாஞ்சராத்ரதீபம் கொண்டாடப்பட்டு, சொக்கப்பனையை எரிப்பர். அப்போதுவீடுகள், வணிக நிறுவனங்களில் அகல் விளக்குகளை ஏற்றி வழிபடுவது வழக்கம். இதற்காக பரமக்குடி ஐந்து முனை ரோட்டில், விருத்தாச்சலம் பகுதியில்இருந்து வந்துள்ள வியாபாரிகள் ரூ.2 முதல் ரூ.200க்கும் அதிகமான விலை உடைய வண்ண, வண்ண அகல்விளக்குகளை விற்பனைக்கு வைத்துஉள்ளனர்.இதில் சிறிய ரகம் தொடங்கி, யானை, பாவை, விநாயகர்,தேங்காய், துளசி மாட விளக்குகள் மற்றும் ஒரு திரி தொடங்கி ஐந்து திரி ஏற்றும் வகையில் அடுக்கி வைத்துள்ளனர்.இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.