சதுரகிரி மலைக்கு செல்ல நவ.,30 வரை பக்தர்களுக்கு தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2020 04:11
சதுரகிரி: சதுரகிரி மலைக்கு செல்ல நவ.,30 வரை பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நாட்களில் மட்டுமே கோவிலுக்கு செல்ல வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், மழை காரணமாக கோவிலுக்கு செல்லும் பாதையில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலிப்பாறை, வழுக்குப்பாறை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மலைக்கு செல்ல நவ.,30 வரை பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.