திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் நுழைய பொதுமக்களுக்கு தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2020 04:11
திருக்கோவிலூர்: தீபத் திருவிழாவிற்கு வெளி மாவட்ட பக்தர்கள் செல்லாத வண்ணம் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளியூர் பக்தர்கள் தீபத்தை காண திருவண்ணாமலைக்கு யாரும் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இச்சூழலில் திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் நுழையும் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையான அத்திப்பாக்கம், முருக்கம்பாடி, மூங்கில்துறைப்பட்டு உள்ளிட்ட இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். மாவட்ட எஸ்.பி., ஜியாவுல் ஹக் உத்தரவின்பேரில், திருக்கோவிலூர் டி.எஸ்.பி., ராஜூ மேற்பார்வையில் சோதனைச் சாவடி மையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை நேற்று காலை முதல் துவக்கியுள்ளனர். தீபத் திருவிழா முடியும்வரை கண்காணிப்பு தொடரும் என போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.