தஞ்சாவூர், தஞ்சை பெரிய கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு பெருவுடையாருக்கு பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
தஞ்சாவூர் பெரிய கோவில் கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மாலை நந்தியம் பெருமானுக்கு பால், மஞ்சள், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு பல வகையான மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கண்ணைக் கவரும் வகையில் செய்யப்பட்ட மன்னர் அலங்காரத்தால் ஜொலித்தார் பெருவுடையாரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து சென்றனர்.