பதிவு செய்த நாள்
28
நவ
2020
05:11
வடமதுரை: தென்னம்பட்டியில் இந்திரா நகர் விநாயகர், மட்டப்பாறை காளியம்மன், மாரியம்மன் கோயில் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.ஆதிநாதபெருமாள் கோயில் அர்ச்சகர் வெங்கடேசன் நடத்தி வைத்தார். கரூர் எம்.பி.,ஜோதிமணி, முன்னாள் எம்.எல்.ஏ.,பழனிச்சாமி, ஒன்றிய தலைவர் தனலட்சுமி, கவுன்சிலர் ராஜசேகர், ஊராட்சி தலைவர் கோமதி, காங்.,வட்டார தலைவர் ராஜரத்தினம், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், சாமிநாதன் பங்கேற்றனர்.
நிலக்கோட்டை: நவக்கிரக ேஹாமம், பூர்ணாஹூதி, தீப ஆராதனை நடந்தது. அன்று மாலை எந்திரம் வைத்து அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. நேற்று கோபூஜை, யாத்ராதானம், புன்யாஹவாசனம், கிராம தெய்வ வழிபாடு நடந்தது. காலை 9:00 மணிக்கு தீர்த்த குடங்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கும்பத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது. உத்தப்பநாயக்கனுார் சந்தோஷ் குழுவினர் கும்பாபிேஷம் நடத்தினர்.