கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கார்த்திகை தீபத்தன்று வீட்டில் பெண்கள் பாட வேண்டிய பாடல் இது.விளக்கே திருவிளக்கே: வேந்தன் உடன்பிறப்பே!சோதி மணிவிளக்கே: சீதேவி பொன்மணியே!அந்தி விளக்கே: அலங்கார நாயகியே!காந்தி விளக்கே: காமாட்சித் தாயாரே!பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டுகுளம்போல எண்ணெய் விட்டுகோலமுடன் ஏற்றி வைத்தேன்.ஏற்றினேன் நெய்விளக்கு: எந்தன் குடிவிளங்கவைத்தேன் திருவிளக்கு: மாளிகையும் தான் விளங்கமாளிகையில் சோதியுள்ளமாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்!மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மாசந்தான பாக்கியத்துடன் தனங்களும் தாரும் அம்மாபெட்டி நிறையப் பூஷணங்கள் தாரும் அம்மாபட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மாகொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மாபுகழுடம்பைத் தாரும் அம்மா: பக்கத்தில் நில்லும் அம்மாஅல்லும் பகலும் எந்தன் அண்டையிலே நில்லும் அம்மாசேவித்து எழுந்திருந்தேன்: தேவி வடிவம் கண்டேன்வஜ்ரக் கிரீடம் கண்டேன்: வைடூரிய மாலை கண்டேன்முத்துக் கொண்டை கண்டேன்: முழுப்பச்சைமாலை கண்டேன்உரிமுடி கண்டேன்: தாழைமடல் சூடக் கண்டேன்பின்னழகு கண்டேன்: பிறை போல நெற்றி கண்டேன்சாந்துடன் நெற்றி கண்டேன்: தாயார் வடிவம் கண்டேன்கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டும் கண்டேன்மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்கைவளையல் கலகலவென கணையாழி மின்னக் கண்டேன்தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்கக் கண்டேன்காலில் சிலம்பு கண்டேன்: காலாழி பீலி கண்டேன்மங்கள நாயகியை மனங்குளிரகண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்!அன்னையே அருந்துணையே அருகிருந்து காரும் அம்மாவந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மாதாயாரும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்மாதாவே! உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்: