விஷ்ணு தலங்களில் மிகவும் புகழ் பெற்ற திருமலை திருப்பதியில் கார்த்திகை தீபத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். திருக்கார்த்திகைத் தீபத்தன்று பெருமாள் வீதியுலா வருவார். அதன்பின் திருப்பு மண்டபம் என்ற இடத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். அடுத்து கோயிலுக்கு எதிரே ஆலய நுழைவாயில் அருகே நடைபெறும் சொக்கப்பனைக் கொளுத்தும் நிகழ்ச்சியைக் கண்டுகளிப்பார். பிறகு ஆலயம் செல்வார். அப்போது பக்தர்களுக்கு லட்டும், கார்த்திகைப் பொரியும் பிரசாதமாகத் தருவார்கள்.