பதிவு செய்த நாள்
01
டிச
2020
03:12
கரூர்: கரூர், அலங்காரவல்லி சவுந்திரநாயகி உடனாகிய, கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபி?ஷக விழா, நேற்று கணபதி பூஜையுடன் துவங்கியது. கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கும்பாபி?ஷக விழாவுக்காக, இரண்டு மாதங்களாக புனரமைக்கும் பணி, கோபுரங்கள், சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜையுடன், கும்பாபி ?ஷக விழா துவங்கியது. நாளை முதல், டிச.,3 வரை, ஐந்து கால பூஜை நடைபெறுகிறது. 4ல் அதிகாலை, 2:30 மணிக்கு ஆறாம் யாக கால பூஜை, 5:30 மணிக்கு மேல், 7:00 மணிக்குள் அனைத்து விமானங்கள், ராஜகோபுரம், பரிவார மூர்த்திகள், மூலமூர்த்திகளுக்கு கும்பாபி?ஷகம் நடக்கிறது. மாலை, 4:30 மணிக்கு திருக்கல்யாண உற்வசம், 6:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடக்கிறது.