Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ... வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஜொலிக்கும் சுவாமி சிலைகள் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு: கடைசி நாளில் ஏராளமானோர் தரிசனம்
எழுத்தின் அளவு:
ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு: கடைசி நாளில் ஏராளமானோர் தரிசனம்

பதிவு செய்த நாள்

02 டிச
2020
11:12

திருவொற்றியூர் : ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு நிகழ்வின் கடைசி நாளான நேற்று, தலைமை செயலர் உட்பட ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை, திருவொற்றி யூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. இங்கு, ஆண்டு முழுதும், மூலவர் ஆதிபுரீஸ்வரர், கவசத்துடன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.ஆண்டின், கார்த்திகை மாதம், பவுர்ணமி தினத்தன்று கவசம் திறக்கப்பட்டு, மூன்று நாட்களுக்கு, புணுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.கையில் வழங்கினர்இவ்வாண்டு, நவ., 29ம் தேதி மாலை கவசம் திறக்கப்பட்டு, புணுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.ஆண்டுக்கொருமுறை மட்டும் நடைபெறும் இந்த அரிய நிகழ்வை காண, தமிழகம் முழுதும், லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவர். இம்முறை, கொரோனா பரவல் காரணமாக, அரசின் வழிகாட்டு நெறிமுறை படி, கவசம் திறப்பு நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.அதன்படி, முக கவசம், தனிமனித இடைவெளி, உடல் வெப்பநிலை பரிசோதனை உள்ளிட்ட விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. வழக்கமாக நெற்றியில் வைத்து விடப்படும் புணுகு சாம்பிராணி தைல பிரசாதம், இம்முறை கையில் வழங்கப்பட்டன.

காத்திருக்க வேண்டும் கடைசி நாளான நேற்று, தலைமை செயலர் சண்முகம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, வேலுமணி, திருவேற்காடு கோவில் இணை கமிஷனர் லட்சுமணன், மயிலாப்பூர் கோவில் இணை கமிஷனர் காவேரி, வடபழநி கோவில் தக்கார் ஆதிமூலம், மாங்காடு கோவில் தக்கார் சீனிவாச முதலியார் உட்பட, ஏராளமானோர் பங்கேற்று, ஆதி புரீஸ்வரரை கவசமின்றி தரிசனம் செய்தனர்.நேற்றிரவு, அர்த்தஜாம பூஜைக்கு பின், ஆதிபுரீஸ்வரருக்கு மீண்டும் கவசம் அணிவிக்கப்பட்டது. இனி, ஆதிபுரீஸ்வரை கவசமின்றி தரிசிக்க, ஓராண்டு காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.திருக்கோவில் உதவி கமிஷனர் சித்ரா தேவி தலைமையில், 160க்கும் மேற்பட்ட போலீசார், 300 ஊழியர்கள் உட்பட, 500க்கும் மேற்பட்டோர், விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.கேரளா ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar