பதிவு செய்த நாள்
03
டிச
2020
05:12
திருப்பூர் : ஆண்டிபாளையம் ஸ்ரீமாரியம்மன் கோவில் பூச்சாட்டு, பொங்கல் விழா, 8 ம் தேதி நடைபெற உள்ளது.
நுாற்றாண்டு பழமை வாய்ந்த, ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவில், திருப்பூர் சுற்றுப் பகுதிகளில் பிரசித்தி பெற்றது. கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா 29 ம் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் துவங்கியது, நேற்று முன்தினம், பொரி மாற்றும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. நாளை காலை, 7:00 முதல், 11:00 வரை, காமாட்சிபுரி ஆதீனம் சிவிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில், உலக நலன் வேண்டி, 27 நட்சத்திர கோமாதா பூஜை நடக்கிறது. வரும், 5ல், கணபதி ேஹாமம், இரவு, 8:00 மணிக்கு அம்மை அழைத்தல், 10:00 மணிக்கு படைக்கலம்.
வரும் 7 ம் தேதி காலை விநாயகர் பொங்கல், 8 ம் தேதி ஐந்து கிராம மக்களின் மாவிளக்கு ஊர்வலம், 9 ம் தேதி காலை முதல் மதியம் வரை பொங்கல் விழா, மாலை, 12:00 மணிக்கு மகாதரிசனம் மற்றும் சிறப்பு அபிஷேகம்,அன்று மாலை, 6:30 மணிக்கு, சின்னாண்டி பாளையத்தில் இருந்து அலகு குத்தி தேர் இழுக்கும் ஊர்வலம் நடக்கிறது. வரும், 10ம் தேதி காலை, 10:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு அபிஷேகம் நடைபெற உள்ளது.பூச்சாட்டு பொங்கல் விழாவையொட்டி, ஆண்டிபாளையம், சின்னாண்டிபாளையம், பெரியாண்டிபாளையம், குளத்துப்புதுார், குள்ளேகவுண்டம்பாளையம் பகுதிகள், களை கட்டியுள்ளன.விழா ஏற்பாடுகளை, பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.