பழநி : பழநி முருகன்கோயில் உண்டியல் கடந்த நவ., 24 அன்று எண்ணப்பட்டது. அதன் பின் ஒத்திவைக்கப்பட்டது. நேற்று மீண்டும் எண்ணப்பட்டது. இதில் ரூ. 52 லட்சத்து 8 ஆயிரத்து 320, தங்கம்- 93 கிராம், வெள்ளி- 1063 கிராம், 4 வெளிநாட்டு நாணயங்கள்- கிடைத்துள்ளது. செயல் அலுவலர் கிராந்திகுமார்பாடி, துணை ஆணையர் செந்தில்குமார், மதுரை உதவி ஆணையர் விஜயன், ஆய்வாளர், வங்கிப் பணியாளர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.