ஓமலூர்: ஓமலூரில், விஷ்வ ஹிந்து பரிஷத், கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில், மாவட்ட பொதுக்குழு கூட்டம், நேற்று நடந்தது. சேலம் மாவட்ட தலைவர் சிவமகேந்திரன் தலைமை வகித்தார். அதில், மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் பேசினார். தொடர்ந்து, தமிழகத்தில் கோவில் சொத்துகளை மீட்டெடுக்க வேண்டும்; பூசாரிகளுக்கு அரசு அனைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருதல்; தெய்வங்களை இழிவுபடுத்தும் தொழிலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்தல்; அனைத்து பூசாரிகளுக்கு அரசு ஓய்வூதியம், மாத ஊக்கத்தொகை வழங்குதல்; ஈரோடு மாவட்ட ஹிந்து அறநிலையத்துறையின் கீழ், மாற்றப்பட்ட நாமக்கல் மாவட்டத்தை மீண்டும், சேலம் மாவட்ட அறநிலையத்துறைக்கு கொண்டு வருதல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.