திண்டிவனம்: திண்டிவனம் அருகே பள் ளிப்பாக்கத்திலுள்ள திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. திண்டிவனம் அருகே உள்ள பள்ளிப்பாக்கம் கிராமத்திலுள்ள திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு தீபாராதனை, யாத்ரா தானம், கலசபுறப்படும் தொடர்ந்து 9.30 மணிக்கு மாங்காடு மணி சாஸ்திரிகள் தலைமையில், கார்த்திக் சாஸ்திரிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.