பதிவு செய்த நாள்
05
டிச
2020
06:12
விழுப்புரம் : விழுப்புரம், நாப்பாளைய தெருவில் அமைந்துள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில், 146ம் ஆண்டு பெருவிழாவை யொட்டி, தேர்பவனி நடைபெற்றது.
விழுப்புரம், நாப்பளைய தெருவில் உள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் 146வது ஆண்டு பெருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்தோடு துவங்கியது. இதையடுத்து, தினந்தோறும் மாலை 5.30 மணிக்கு தேர்பவனி, திருப்பலி நடந்தது. தொடர்ந்து பெருவிழா கூட்டு திருப்பலி நடந்தது. இதில், முத்து சித்தர் அமைதியகம் பிச்சைமுத்து கலந்து கொண்டனர். பின், மாலை 5.30க்கு திருப்பலி, புனிதரின் தேர்பவனி நடந்தது. இதில், திண்டிவனம், புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி, முதல்வர் சகாய அருள்செல்வம் மற்றும் அப்பகுதியில் உள்ள கிறிஸ்துவ மக்கள் கலந்து கொண்டு, முக்கிய வீதிகள் வழியாக தேர்பவனி நடந்தது. நேற்று காலை 7.30 மணிக்கு திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடந்தது.